Thursday, October 19, 2017

நாத துவாரகா


இது ராஜஸ்தானில்(உதய்ப்பூருக்கு அருகில் (48 கி மீ ) உள்ள ஸ்தலமாகும். இந்த தலத்தில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் உள்ள கோவர்தன க்ருஷ்ணன் சிலை,இஸ்லாமிய மன்னன் ஒளரங்கசீப்பின் காலத்தில், அவனது இந்து தர்ம எதிர்ப்பின் பயத்தில்,, மதுராவிலிருந்து எடுத்துவரப்பட்டதாகும்.
இந்த கோவில் கிருஷ்ணரின் தந்தை நந்தகோபரின் வீடு போலக் கட்டப்பட்டதால் நந்த பவனம் என்றும் அழைக்கப்படுகிறது.
நந்தகோபர் வீட்டில் இருந்தது போல் , ஒவ்வொன்றிற்கும் ஒரு அறை என்று அமைந்திருக்கிறது.
பால் , தயிர் வைத்திருக்க பால் அறை,பூக்களை வைக்க பூ அறை, நகை அறை ,கஜானா அறை .. என்று பல அறைகளைக் கொண்டது போல் அமைந்த இந்தக் கோவில் அரண்மனையில் , ஸ்ரீ.கிருஷ்ணன் தான் இளவரசன்.
வெளியில் சென்று வர கண்ணன் வீட்டில் உள்ளது போல் ஒரு ரதமும் உண்டு.

கோவில் வளாகத்தினுள்ளே காமிரா அனுமதி இலலை. எனவே வெளியில் உள்ள அழகான கடைத் தெருவில் சற்று உலாவலாம் வாருங்கள் 


















இன்னும் நிறைய படங்கள் உள்ளன.

No comments:

Post a Comment