Showing posts with label உஜ்ஜயின். Show all posts
Showing posts with label உஜ்ஜயின். Show all posts

Wednesday, October 18, 2017

பர்த்ருஹரி குகைகள்


“ஆசைகளை நாம் அனுபவிக்கவில்லை ஆசை  நம்மை விழுங்குகிறது
யாகத் தீ எரியவில்லை, நாம் தான்  எரிந்து கொண்டிருக்கிறோம்
காலம் செல்வதில்லை அது எப்போதும் முடிவற்றது; இருந்து கொண்டிருக்கிறது; நாம் தான் வந்து சென்று கொண்டிருக்கிறோம்
ஆசைகள் முதுமையில் குறைவதில்லை நாம் தான் முதுமையில் குறைந்து கொண்டிருக்கிறோம்” - வைராக்ய சதகம்
-
விக்ரமாதித்ய மாமன்னரின் சகோதரன் பர்த்ருஹரி சகல சுகங்களையும் துறந்து த்யானம் செய்த இடம், இந்த குகையாகும் .அண்ணனான இவர், ராஜ்யத்தைத் துறந்ததால் தான் தம்பி விக்ரமாதித்யன் அரசரானார்.
இவர் சமஸ்க்ருத இலக்கணத்தை (செய்யுள் இலக்கணம் உட்பட ) வகைப் படுத்தியவர். பதஞ்சலி முனிவரின் சமஸ்க்ருத இலக்கண விதிகளை மேலும் வகைப்படுத்தி ஸ்திரப்படுத்திய பெருமை இவரையே சாரும்.
ஆன்மீக உலகில் புகழ் பெற்ற வைராக்ய சதகம் இவரால் செய்யப்பட்டதே.
பத்ரகிரியார் என்ற பெயரில் பட்டினத்தாரின் சீடராகத் திகழ்ந்த இவருடைய ஞானப் புலம்பல் பாடல்கள் (தமிழ்..ஆம் தமிழில் தான்..!)  மிகவும் பொருள் பொதிந்தது
Sample ->
“தந்தை, தாய், மக்கள், சகோதரரும் பொய்யெனவே
சிந்தைதனில் கண்டு திருக்கறுப்பது எக்காலம்? 13
உற்றுற்றுப் பார்க்க ஒளிதரும் ஆனந்தம்அதை
நெற்றிக்கு நேர்கண்டு நிலைப்பது இனி எக்காலம்? 227”



உலகப் பொருள் பால் பட்ட சுகங்களின் உச்சியில் திளைத்துப் பின் அவற்றை அறவே துறந்து யோக உலகில் பரசுகத்தைச் சுகிப்பதில் நாட்டம் கொண்ட பர்த்ருஹரி ஒரு தனிப்பிறவி. அவர் த்யானம் செய்த இடம் சிறப்புற்றது அல்லவா ?













Thursday, May 25, 2017

உஜ்ஜயின்


மத்யப்ரதேசத்தில்  ஷிப்ரா நதிக்கரையில் அமைந்துள்ள உஜ்ஜைன் இந்த்ரபுரி அமராவதி, அவந்திகா புரி என்ற வேறு பெயர்களையும் கொண்டது.

மஹா காலேஷ்வர் குடி கொண்டு அருள் செய்யும் இத்தலம்  ஏழு மோக்ஷஸ்தலங்களில் ஒன்றாகும். மேலும், இத்தலம், பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகும்.

முக்தி தரும் ஏழு தலங்கள்:
1. அயோத்தி, 2. மதுரா, 3. மாயா (ஹரித்வார்), 4. துவாரகை, 5. காசி, 6. அவந்தி (உஜ்ஜயினி), 7. காஞ்சி
ஜ்யோதிர் லிங்க தலங்கள்
சோம்நாத் (குஜராத்), மல்லிகார்ஜுன ஸ்வாமி (ஸ்ரீ சைலம்), மஹா காலேஸ்வர் (உஜ்ஜைன்), ஓம்காரேஸ்வர் (மத்தியபிரதேசம்),கேதாரநாத்,பீமசங்கர்(மஹாராஷ்ட்ரா),காசி விஸ்வநாதர்,த்ரயம்பகேஸ்வரர்(மஹாராஷ்ட்ரா)

 12 வருடங்களுக்கு ஒரு முறை கும்பமேளா நடைபெறும் நான்கு தலங்களில் இதுவும் ஒன்று.
மற்ற மூன்று கும்ப மேளாத்   தலங்கள் - நாசிக்,ஹரித்துவார் மற்றும் அலஹாபாத் ஆகியவை.

கண்ணபிரானின் குருவாகிய சாந்திபினி முனிவரின் ஆசிரமம் இத்தலத்தில் உள்ளது.

முன் காலத்தில் , தங்கக் கோபுரங்கள் பலவற்றைக் கொண்ட நகரம் என்பதால் ஸ்வர்ண ஸ்ருங்கா என அழைக்கப் பட்டது.

சகாப்தத்தைத் தோற்றுவித்த சாலிவாகனன், மகாகவி காளிதாசர், தண்டி முதலிய மேதைகள் வாழ்ந்த தலம்.


மஹாகாளேஸ்வர்
த்ரிபுராரி சிவ சங்கரா
நாக பூஷணா நாகாபரணா
(த்ரிபுராரி சிவ சங்கரா)
ஓம்காரேஸ்வர நமச்சிவாய
மஹா காலேஸ்வர நமச்சிவாய

மாகாளர் பாதாளத்தில் கம்பீரமாக, கவசத்தில் காட்சித் தருகிறார். பூமிக்குள் பல படிகள் இறங்கிப் பாதாளத்தில் தான் மாகாளேசுவரரைத் தரிசிக்க வேண்டும்.
தல மஹிமையைக் கூறும் ஒரு பாடல் இத்தலத்தை சிவனின் மனம் உகந்த ஸ்தலம் என்று பாடுகிறது. இத்தலத்தின் ஜ்யோதிர் லிங்கத்தை தரிசித்தவரைக் கனவிலும் துன்பம் அண்டாது என்றும் கூறுகிறது

மஹா காலேஸ்வருக்கு நடைபெறும் மயானச் சாம்பல் அபிஷேகம் மிகவும் பிரசித்தி பெற்றது . சாதாரணமாக மயானச் சாம்பல் நம் மீது படும்போது பிணியைக் (Infection) கொடுக்கிறது. மஹாகாளேஸ்வரனின் மேனி பட்ட மயானச் சாம்பல், பிறவியின் தாமசச் சோம்பலைப் போக்கி சத்வமாக்குகிறது(Perfection).

இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
மஹாகாளேஸ்வர் கோவிலுக்கு அருகே தான் ஷிப்ரா நதி ஓடுகிறது .
ஷிப்ரா நதியின் கரையில் வரிசையாகப் பல சிவலிங்கங்கள் உள்ளன.
இந்நதிக் கரையில் விக்கிரமாதித்தனின் குல தெய்வமாகிய வரசித்தி மாதா கோயில் உள்ளது.

இதோ  இத்தலத்தின் சில நினைவுகள் ...

ஷிப்ரா நதி









நாங்கள் தங்கி இருந்த இடம்














ஷிப்ரா நதிக்கரையில் உபன்யாசம்